×

கரூர் அருகே குட்கா பதுக்கி விற்க முயன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

கரூர், ஜூலை 4: தென்னிலை, தாந்தோணிமலை, பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய மூன்று பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறைமுகமாக குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்கள் மீது அந்தந்த காவல் நிலைய போலீசாரும், கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாரும் வழக்கு பதிந்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170 கிராம் எடையுள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதே போல், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துலாடம்பட்டி பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 140 கிராம் எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து 100 கிராம் எடையுள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பகுதிகளிலும் 410 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடைகளில் வைத்து விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூர் அருகே குட்கா பதுக்கி விற்க முயன்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Gutka ,Thannilai, Thanthonimalai, Pashupathipalayam ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...